search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக தலைமை தேர்தல் அதிகாரி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பறக்கும் படையினரால் நடத்தப்படும் வாகன சோதனைகள் வியாபாரிகளுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு பல்வேறு புகார்கள் சென்றது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 16-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. தேர்தல் நேரத்தில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50,000-க்கு மேல் யாரும் பணம் கொண்டுபோனால் வாகன சோதனை நடத்தும் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    பறக்கும் படையினரால் வாகன சோதனை நடத்தப்படும் நிகழ்வுகள் பொதுமக்களுக்கும் குறிப்பாக, வியாபாரிகளுக்கு பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு பல்வேறு புகார்கள் சென்றது. அதில் பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில், ரூ.50,000 பணம் எடுத்துச்செல்வதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து முடிவெடுக்கும். விரைவில் ரொக்கப் பணம் கொண்டுசெல்வது குறித்த புதிய அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என தெரிவித்தார்.

    • வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக ஸ்ரீரங்கம்.
    • வழக்கம்போல் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.

    மாவட்டங்களில் உள்ள  வாக்காளர் பட்டியலில் விவரம் வெளியீடு:-

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 9 லட்சத்து 87 ஆயிரத்து 478 ஆண் வாக்காளர்கள், 10 லட்சத்து 41 ஆயிரத்து 827 பெண் வாக்காளர்களும், 166 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 20 லட்சத்து 29 ஆயிரத்து 471 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் என்பது குறிப்பிடதக்கது.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் 10,45,551 ஆண் வாக்காளர்களும், 10,77,438 பெண் வாக்காளர்களும், 287 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 21 லட்சத்து 23 ஆயிரத்து 276 வாக்காளர்கள் உள்ளனர். இதில் வழக்கம்போல் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.

    இறுதி வாக்காளர் பட்டியலின்படி கோவை மாவட்டத்தில் 15,09,906 ஆண்கள், 15,710,93 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 595 என மொத்தம் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர்.

    திருச்சி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 91 ஆயிரத்து 890 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 11 ஆயிரத்து 573, பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 79 ஆயிரத்து 985-யும், பிற வாக்காளர்கள் 332 பேரும் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக ஸ்ரீரங்கமும், குறைந்த வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்ற தொகுதியாக லால்குடியும் உள்ளது.

    • 1 லட்சத்து 4 ஆயிரத்து 141 வாக்காளர்களின் பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
    • ஜூலை 1-ந் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.

    சென்னை :

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம், ஜனவரி 1-ந் தேதி மட்டுமல்லாது, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகியவற்றை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்த்து வருகிறது.

    அந்த அடிப்படையில், ஜூலை 1-ந் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். அதன்படி 1 லட்சத்து 39 ஆயிரத்து 108 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    27 ஆயிரத்து 332 வாக்காளர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு முகவரி மாற்றம் செய்து உள்ளனர். 3 லட்சத்து 42 ஆயிரத்து 185 வாக்காளர்களின் பெயர்கள் இடமாறுதல், இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டு உள்ளன.

    மேலும் 1 லட்சத்து 4 ஆயிரத்து 141 வாக்காளர்களின் பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    ஜூலை 10-ந் தேதி வரையிலான கணக்குப்படி தமிழ்நாட்டில் 6 கோடியே 10 லட்சத்து 39 ஆயிரத்து 316 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 கோடியே 29 ஆயிரத்து 237 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 10 லட்சத்து 2 ஆயிரத்து 98 பெண் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 981 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாக்காளர் பட்டியலில் இதுவரை, 4,34,583 வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிக்கப்பட்டு உள்ளார்கள்.
    • வாக்காளர் பட்டியலினை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in/ என்ற வலைதளத்திலும் காணலாம்.

    சென்னை:

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்தியத் தேர்தல் ஆணையம், ஜனவரி 1-இல் மட்டுமல்லாது, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று தொடர்ச்சியான தகுதியேற்படுத்தும் நாட்களில் இளைஞர்கள் விண்ணப்பங்களை முன்கூட்டியே வழங்குவதற்கு அறிவுறுத்தியுள்ளது.

    இனி, ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும் மற்றும் 18 வயது நிறைவடைந்த ஆண்டின் அடுத்த காலாண்டில் தகுதியான இளைஞர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். 2023 வாக்காளர் பட்டியல் இன்று (31.05.2023) வெளியிடப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களாக 1,23,064 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. 51,295 வாக்காளர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு முகவரி மாற்றம் செய்து உள்ளனர். 9,11,820 வாக்காளர்களின் பெயர்கள் இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன. மேலும், 2,60,103 வாக்காளர்களின் பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    தமிழ்நாட்டில் 6,12,36,696 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,01,18,904; பெண் வாக்காளர்கள் 3,11,09,813, மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,979 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், 31.05.2023 அன்று வெளியிடப்பட்டு உள்ள வாக்காளர் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட 27-சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது.

    இத்தொகுதியில் மொத்தம் 6,51,077 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3,26,253; பெண்கள் 3,24,713; மூன்றாம் பாலினத்தவர் 111).

    வாக்காளர் பட்டியலில் இதுவரை, 4,34,583 வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிக்கப்பட்டு உள்ளார்கள். மேலும், 18-19 வயதுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 8,80,612.

    வாக்காளர் பட்டியலினை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in/ என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

    வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டிலுள்ளது. 01.04.2023 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பணப்பட்டுவாடா பற்றி புகார் வந்தால் உடனே அங்கு செல்லும் வகையில் பறக்கும் படையினர் தயாராக இருப்பார்கள்.
    • இன்னும் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொள்ளும்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஏற்பாடு குறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு "மாலைமலர்" நிருபருக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் இன்னும் நீக்கப்படாமல் உள்ளது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்திருந்தாரே? அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

    பதில்:- இந்த புகார் மீது விசாரணை மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் அறிக்கை கொடுத்துள்ளார். அதில் வாக்காளர் பட்டியலில் சரியாக இருப்பதாக கூறி உள்ளார்.

    தேர்தல் கமிஷனில் 5 வாக்குச்சாவடிகளை குறிப்பிட்டு புகார் சொல்லப்பட்டிருந்தது. இதனால் அந்த 5 வாக்குச்சாவடிகளின் வாக்காளர் பட்டியலை சரி பார்த்ததில் அனைத்தும் சரியாகவே உள்ளது.

    கேள்வி:- தேர்தல் பிரசாரத்தில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமாக இறங்கி உள்ள நிலையில் 3 தேர்தல் பார்வையாளர்கள் தான் ஈரோட்டுக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். கூடுதலாக பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்களா?

    பதில்:- இதுவரை 3 தேர்தல் பார்வையாளர்கள் வந்துள்ளனர். பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், தேர்தல் செலவினை பார்வையாளர் கவுதம்குமார், காவல் துறை சம்பந்தமான பார்வையாளர் சுரேஷ்குமார் சந்தேவ் அங்கு உள்ளனர்.

    கேள்வி:- ஈரோட்டில் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் கண்காணிப்பு கேமரா அமைக்க திட்டம் உள்ளதா? சென்னையில் இருந்தபடி அனைத்து 'பூத்'களையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படுமா?

    பதில்:- 238 வாக்குச்சாவடிகளில் எந்தெந்த வாக்குச்சாவடிகளுக்கு கண்காணிப்பு கேமரா வைக்கிறார்களோ அதை சென்னையில் இருந்து கண்காணிக்கலாம். மற்ற வாக்குச்சாவடிகள் வீடியோ மூலம் பதிவு செய்யப்படும். அதற்கான ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்படும்.

    கேள்வி:- ஓட்டு போடுவதற்கு என்னென்ன ஆவணங்களை காண்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டதா?

    பதில்:- கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 11 வகையான ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணத்தை காண்பிக்கலாம். வாக்காளர் அடை யாள அட்டை இருந்தால் அதையும் காண்பிக்கலாம்.

    கேள்வி:- வாக்குப்பதிவு நேரத்தில் மாற்றம் இருக்குமா?

    பதில்:- ஏற்கனவே உள்ள நேரம்தான். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம்.

    கேள்வி:-80 வயது நிரம்பியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதா?

    பதில்:- ஆமாம். 80 வயது நிரம்பியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க அங்குள்ள தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம். அந்த பணிகளும் நடந்து வருகிறது.

    கேள்வி:- ஈரோடு தொகுதியில் இதுவரை எவ்வளவு பணம் பிடிபட்டு உள்ளது.

    பதில்:- இதுவரை 25 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

    கேள்வி:- பறக்கும் படை கண்காணிப்பு எந்த அளவில் உள்ளது?

    பதில்:- தொகுதியில் தினமும் வாகன சோதனை நடந்து வருகிறது. சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டு வருகிறது. 6 பறக்கும் படையினர் 3 ஷிப்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.

    கேள்வி:- வேட்பாளருக்கு ஏதாவது மிரட்டல் புகார்கள் வந்துள்ளதா?

    பதில்:- இதுவரை எங்களுக்கு அது போன்ற புகார்கள் வரவில்லை.

    கேள்வி:- இடைத்தேர்தல் என்றாலே பணம் விளையாடும். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை இந்த தேர்தலில் எப்படி தடுப்பீர்கள்?

    பதில்:- நாங்கள் ரொம்ப தீவிரமாக கண்காணிக்கிறோம். இப்போது அங்கு விஜிலன்ஸ் டீம், வருமான வரித்துறை அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுவரை பெரிய அளவில் புகார்கள் வரவில்லை. அங்குள்ள நிலைமைகளை தேர்தல் பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பணப்பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும்.

    ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்வுகளை தேர்தல் பார்வையாளர்களே 'அறிக்கை'யாக தயாரித்து இந்திய தேர்தல் கமிஷனுக்கு கூட அனுப்பலாம். இதில் தேர்தல் கமிஷன் இறுதி முடிவு எடுக்க தேர்தல் பார்வையாளர்களே பரிந்துரைக்க முடியும்.

    கேள்வி:- வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் கமிஷன் என்னென்ன கண்காணிப்பில் ஈடுபடுகிறது?

    பதில்:- பொதுவாக ரோடுகளில் தடுப்பு அமைத்து வாகன சோதனை நடத்துவார்கள். சோதனை சாவடிகள் பலப்படுத்தப்படும்.

    குறிப்பாக பணப்பட்டுவாடா பற்றி புகார் வந்தால் உடனே அங்கு செல்லும் வகையில் பறக்கும் படையினர் தயாராக இருப்பார்கள். இன்னும் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொள்ளும்.

    கேள்வி:- நீங்கள் ஈரோடு தொகுதிக்கு சென்று வரும் உத்தேசம் உள்ளதா?

    பதில்:- தேர்தல் கமிஷனில் இருந்து வரும் உத்தரவை பொறுத்துதான் அது அமையும். பொதுவாக இடைத்தேர்தலுக்கு நாங்கள் செல்வது இல்லை. தேர்தல் பார்வையாளர்களே பார்த்து முடிவு செய்வார்கள். அவர்களே கமிஷனுக்கு தேவையான தகவல்களை அறிக்கையாக தயாரித்து கொடுப்பார்கள்.

    தேர்தல் பார்வையாளர்கள் கூடுதலாக தேவைப்பட்டால் தேர்தல் ஆணையம் முடிவு செய்து அனுப்பி வைக்கும்.

    இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.

    1. கடவுச்சீட்டு, 2. ஓட்டுநர் உரிமம், 3. மத்திய-மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட பணியாளர் அடையாள அட்டை, 4. புகைப்படத்துடன் கூடிய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகம், 5. மத்திய அரசு வழங்கும் நிரந்தர கணக்கு எண் அட்டை, 6. தேசிய மக்கள் பதிவேடு அடையாள அட்டை, 7. தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அட்டை, 8. தொழிலாளர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட காப்பீட்டு அட்டை, 9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், 10 சட்டசபை, பாராளுமன்றம் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலர் அடையாள அட்டை, 11. ஆதார் அட்டை.

    இந்த 11 வகை ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்களிப்பதற்கு அடையாள அட்டையாக பயன்படுத்தலாம்.

    ×